என் கிறுக்கல்களும் பொருக்கல்களும் உங்கள் பார்வைக்காக

Thursday, November 26, 2009



5. கட்டாயக் கல்வி


பன்றி எதற்குத் தெருவில் வந்தது?

பாட்டையி லுள்ள கழிவை உண்ண.

என்ன கழிவு தெருவில் இருக்கும்?

இருக்கும் பிள்ளைகள் வெளிக் கிருந்தனர்.


என்ன காரணம் அப்படிச் செய்ய?

இருக்கும் பெற்றோர் ஒழுக்க மற்றோர்.

சின்ன நடத்தை எப்படித் தொலையும்?

சிறந்த அறிவு பெருக வேண்டும்.


அறிவை எப்படி அடைய முடியும்?

அனைவர் தாமும் படிக்க வேண்டும்.

நிறைய எவரும் படிப்ப தெப்படி?

நீள முயன்றால் முடியும்.


குறைகள் தீர முயல்வ தெப்படி?

கூட்ட மக்கள் கிளர்ச்சி வேண்டும்.

கறைகள் போகா திருப்ப தென்ன?

கட்டாயக் கல்வி கிட்டாமை தான்.

No comments: