என் கிறுக்கல்களும் பொருக்கல்களும் உங்கள் பார்வைக்காக

Monday, April 12, 2010

2. மழை




வானத்தி லேபிறந்த மழையே வா! -இந்த
வையத்தை வாழவைக்க மழையே வா!
சீனிக்கரும்பு தர மழையே வா! - நல்ல
செந்நெல் செழிப்பாக்க மழையே வா!
கானல் தணிக்க நல்ல மழையே வா! - நல்ல
காடு செழிக்க வைக்க மழையே வா!
ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் - நீ
அழகுப டுத்தநல்ல மழையே வா!

No comments: